ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை தூய்மையான மனமுள்ளோருக்கு , வஞ்சக எண்ணம் இல்லை 88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை 89. வைகல் தோறும் தெய்வம் தொழு தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு 90. ஒத்த இடத்து நித்திரை கொள் பழக்கப்பட்ட , சமமான இடத்தில் படுத்து உறங்கு 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது .
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 81. வளவன் ஆயினும் அளவு அறிந்து உண் சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும் , வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும் 82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும் 83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது 84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் வீரனுடன் கூடிய நட்பு , கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும் 85. உரவோர் என்கை இரவாது இருத்தல் யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்