Skip to main content

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

கொன்றை வேந்தன்



61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும்

அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்


62. பீரம் பேணில் பாரம் தாங்கும்

தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்


63. புலையும், கொலையும் களவும் தவிர்

புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே


64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது


65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்


ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது


Comments

Popular posts from this blog

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை தூய்மையான மனமுள்ளோருக்கு , வஞ்சக எண்ணம் இல்லை 88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை 89. வைகல் தோறும் தெய்வம் தொழு தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு 90. ஒத்த இடத்து நித்திரை கொள் பழக்கப்பட்ட , சமமான இடத்தில் படுத்து உறங்கு 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது .

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன் 67. பையச் சென்றால் வையந் தாங்கும் நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம் 68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு 69. போனகம் என்பது தானுழுது உண்ணல் தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும் 70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் தேவாம்ருதமே கிடைத்தாலும் , பிறரோடு சேர்ந்து உண்