|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும் |
அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்
|
62. பீரம் பேணில் பாரம் தாங்கும் |
தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்
|
63. புலையும், கொலையும் களவும் தவிர் |
புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே
|
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் |
கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது
|
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் |
ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது

Comments
Post a Comment