Skip to main content

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

கொன்றை வேந்தன்



81. வளவன் ஆயினும் அளவு அறிந்து உண்

சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்


82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்


83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது


84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்

வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்


85. உரவோர் என்கை இரவாது இருத்தல்

யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்

Comments