Skip to main content

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

கொன்றை வேந்தன்





76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்

77. மேழிச் செல்வம் கோழைப் படாது

கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது

78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு



விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்

80. மோனம் என்பது ஞான வரம்பு

மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை

Comments