ஔவையார் பாடல்கள்
கொன்றை வேந்தன்
|
31. சூதும் வாதும் வேதனை செய்யும் |
சூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்
|
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் |
தவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்
|
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு |
காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்
|
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் |
பொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்
|
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் |
பொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.

Comments
Post a Comment