ஔவையார் பாடல்கள்
கொன்றை வேந்தன்
|
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் |
ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்
|
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் |
அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை
|
8. ஏவா மக்கள் மூவா மருந்து |
செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்
|
9. ஐயம் புகினும் செய்வன செய் |
பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்
|
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு |
ஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்

Comments
Post a Comment