ஔவையார் பாடல்கள்
கொன்றை வேந்தன்
கடவுள் வாழ்த்து
|
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை |
கொன்றைப் பூமாலையை அணிந்திருக்கும் சிவபெருமானின் செல்வனாகிய வினாயகக் கடவுளை என்றும் போற்றி வணங்குவோம்.
|
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் |
தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
|
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று |
கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
|
3. இல்லறமல்லது நல்லறமன்று |
இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
|
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் |
பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
|
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு |
குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்

Comments
Post a Comment